tamilnadu

கொரோனாவுக்கு சிறப்பு எஸ்ஐ பலி

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் பணிபுரியும்  மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு உளவுத்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் நாகர்கோவிலை சேர்ந்த சுரேஷ்குமார் (48). இவர், உடல்நிலை திடீரெனபாதிக்கப்பட்டதை தொடர்ந்துபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குமரிமாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இறந்த முதல்  காவலர்சுரேஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.