tamilnadu

வெளி ஊர்களுக்கான தனியார் பேருந்துகள் நாகர்கோவிலிலிருந்து இயங்கத் தொடங்கின....

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலம்முதல் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டது. அரசு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வந்தாலும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை சுத்தம் செய்து பயணத்திற்கு தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார்  ஆம்னி பேருந்துநிலையத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு  பேருந்தின் உள்பகுதியிலும், பேருந்து நிலையங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர். செவ்வாயன்று மாலை முதல் தனியார் பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.