tamilnadu

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்...

நாகர்கோவில்:
புதிய ஓய்வூதிய திட்டத்தைகைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில்வியாழனன்று வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய ஓய்வு பெற்றதபால் ஊழியர் சங்க மாவட்டதலைவர் பி.இராஜநாயகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் எம்.சுந்தர் ராஜ், எ.மீனாட்சி சுந்தரம், அய்யப்பன் பிள்ளை,ஐவின் ஆகியோர் பேசினர். இதில், பி.அல்போன்ஸ், காளி பிரசாத், நாகராஜன், மனோகர்ஜஸ்டஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.