புலிகள் சரணாலயம் அமைப்பது மத்திய அரசாம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கைவிரிப்பு
நாகர்கோவில், ஜூன் 23- புலிகள் சரணாலயம் அமைப்ப தற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். மத்திய அரசு தான் காடு கள் மற்றும் அதனை சார்ந்த பகுதி களை செயற்கைக்கோள் மூலம் வரை யறை செய்து இப்பணிகளை மேற் கொள்கிறது. தமிழக அரசு இதில் ஏதும் செய்ய முடியாது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வனத்துறை தெற்குமண்டலங்கள் அளவிலான ஆய்வு கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிர சாந்த் வடநேரே, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந் தரம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத் தில் தமிழக காடுகளில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து ஆலோ சனை செய்யப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர் களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன் அளித்த பேட்டியின்போது கூறி யதாவது: தி.மு.க ஆட்சியைவிட அ.தி.மு.க ஆட்சியில் வனத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வன பகுதிகளில் இருந்து மரம் கடத்தல் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வனத்துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைத்து காலிபணியிடங்களும் நிரப்பப்படும். கால வரைமுறைகளைப் பொறுத்து வனத்துறையில் தற்காலிகமாக பணி புரியும் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் அனை வரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர். குமரியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை விரைவில் பல் உயிரின பூங்காவாக மாற்றப்படும். தமிழகம் முழுவதும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் காடுகளில் உள்ள வன விலங்கு களை தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்படும். புலி கள் சரணாலயம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு தான் இப்பணிகளை மேற்கொள்கிறது. காடுகள் மற்றும் அத னைச் சார்ந்த பகுதிகளை செயற்கைக் கோள் மூலம் வரையறை செய்து அவற்றை அமைக்க உள்ளது. தமிழக அரசு இதில் ஏதும் செய்ய முடியாது என அவர் கூறினார்.
அய்யா வைகுண்டர் பற்றி தவறான பதிவுகள்
பாட புத்தகங்களிலிருந்து நீக்க பால ஜனாதிபதி வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜூன் 23- அய்யா வைகுண்ட சுவாமி மனித னாக பிறந்து இறைவனாக அவதாரம் எடுத்தவர். அவருக்கு உருவ வழிபாடு கிடையாது. ஆனால் ஏதோ ஒரு படத்தை வைத்து பாட புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவுகளை நீக்க வேண்டும் என அய்யா அறநெறி பரிபாலன அறக்கட் டளை தலைவர் பால ஜனாதிபதி வலி யுறுத்தியுள்ளார். அய்யா அறநெறி பரி பாலன அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் குமரி மாவட்டம் சாமிதோப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் அறக்கட்டளை தலை வர் பால ஜனாதிபதி செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அய்யா வைகுண்டசுவாமி பற்றி தமிழகஅரசின் 10 மற்றும் 11,12 ஆம் பாட திட்டத்தில் தவறாக கூறப்பட் டுள்ளது. அது அய்யாவழி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. மேலும் அய்யா வைகுண்டசுவாமி மனி தனாக பிறந்து இறைவனாக அவதாரம் எடுத்தவர். அவருக்கு உருவ வழிபாடு கிடையாது. ஆனால் ஏதோ ஒரு படத்தை வைத்து பாட புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதை நீக்க வேண்டும். அகிலத்திரட்டு ஆகம நூலின் படி கருத்துகளை மாணவர்களுக்கு பாடத் திட்டமாக சேர்க்க வேண்டும். தற்போது பாட புத்தகத்தில் உள்ள படத்தையும் நீக்க வேண்டும். இந்த ஒரு மாத காலத் திற்குள் சரி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அய்யா வழிமக்களை திரட்டி மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார்.
அரசுப்பள்ளி கணினி பயிற்றுநர் தேர்வு:
சர்வர் கோளாறால் தேர்வர்கள் பாதிப்பு
நாகர்கோவில், ஜூன் 23- அரசு பள்ளிகளில் 2018-2019ம் ஆண்டில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் முதல் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. இதற்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிறன்று நடை பெற்றது. இந்த தேர்வு எழுத 30 ஆயிரத்து 831 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர் களில் 7 545 பேர் ஆண்கள். 23 ஆயிரத்து 286 பேர் பெண்கள், மாற்று திறனாளி கள் 322 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான ஹால் டிக்கெட்டுகள் கடந்த வாரம் இணைய தளத்தில் வெளி யிடப்பட்டது. இந்த தேர்வுக்காக தமிழ கம் முழுவதும் மொத்தம் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி, குமாரகோயில் என்.ஐ பொறி யியல் கல்லூரி, கருங்கல் இலவுவிளை மார்எப்ரேம் பொறியியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் ஆன்-லைன் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வு மையங்களில் 900 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட் டன. தேர்வை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. தேர்வு மையங்களில் காலை 10 மணிக்கு முன் னரே தேர்வர்கள் வந்து காத்திருந்த னர். இந்நிலையில் காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. ஆனால் சர்வர் கோளாறு காரணமாக ஒரு சில மையங்க ளில் தேர்வு எழுத தேர்வர்களுக்கு அனு மதி வழங்கப்படவில்லை. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தேர்வர்கள் வெளியே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. தேர்வு கால தாமத மாக தொடங்கியதால் தங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என தேர்வர்களில் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதனால் தேர்வு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 12 மணியளவில் தேர்வு மையத்தில் இருந்து சுமார் 50 தேர்வர்களை அரு கில் உள்ள செயின்ட் சேவியர் பொறி யியல் கல்லூரி தேர்வு மையத்துக்கு வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.