இன்று மின்தடை பகுதிகள்
நாகர்கோவில், செப்.15- நாகர்கோவில் தெற்கு மின் வினியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் நகர பிரிவு - 5 வல்லன் குமாரன் விளை அலுவலகத்திற்கு உட்பட்ட 11 கேவி என்ஜிஓ காலனி பீடரில் உள்ள உயர் அழுத்த மின் பாதை மின் கம்பி மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சரக்கல்விளை , கீழசரக்கல் விளை, கீ ழ வண்ணான்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு திங்களன்றுகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும் மின் பாதைகளில் மின்னோட்டம் இருக்காது என்று கருதி பொது மக்கள் மின்னூட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களை வீட்டிற்குள் முடக்கிய கரடி தெரு நாய்களுக்கு பயந்து ஓடியது
திருநெல்வேலி, செப்.15- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மணி முத்தாறு மலையடிவார கிராமத்திற்குள் கடந்த புதன்கிழமை இரவு 8 மணி அளவில் மலையடிவாரப் பகுதியில் இருந்து ஓடி வந்த கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது. தெருவில் கரடி வருவதை பார்த்த மக்கள் பயத்தில் ஓடிச்சென்று அவரவர் வீட்டை பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர். கரடி குறித்து செல்போன் மூலம் வனத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக ஊருக்குள் வந்த கரடியை கண்ட பயத்தில் தெரு நாய்கள் இடைவிடாது குரைத்த தால், கரடி பயந்து ஓட தொடங்கியது. இதையடுத்து கரடியை தெரு நாய்கள் விரட்ட கரடி அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறி கொண்டது. மரத்துக்கு கீழே நின்று சில நாய்கள் குரைத்தபடி நின்றதால் கரடியை விரட்ட வந்த வனத்துறையினர் மரத்தின் மேல் பகுதியில் கரடி பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். நாய்கள் கீழே இருந்ததால் கரடி வெளியே வர அச்சப்படுவதை உணர்ந்த வனத்துறையினர், யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவித்தனர். தெரு நாய்களை விரட்டிவிட்டு, மறைவான பகுதியில் வனத்துறையினர் ஒளிந்து கொண்டனர். அதிகாலை 4 மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட கரடி மரத்தில் இருந்து குதித்து மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
பள்ளி மாணவர்களுக்குள் கத்திக்குத்து: ஒருவர் கைது
நாகர்கோவில், செப்.15- குமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.எம். ஆர்.வி பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். காலாண்டு தேர்வு முடிந்து, வெள்ளியன்று வட சேரி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரு குழுவாக பிரிந்து, சண்டையிட்டு கத்தியால் ஒருவரை ஒரு வர் தாக்கி கொண்டனர். மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் கத்தி குத்து வாங்கி படுகாயம் அடைந்த ஒரு மாணவர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த வடசேரி காவல் துறையினர் ஒரு மாணவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். புளு டூத் ஸ்பீக்கர் வாங்கியதில் பிரச்சனை ஏற்பட்டு, கத்தி குத்து வரை சென்றது விசாரணையில் தெரியவந்தது.
நலவாரிய பணப் பலன்களை இரட்டிப்பாக்க கட்டுமானத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
திருச்சுழி, செப்.15-நலவாரியப் பணப்பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும். மணல், ஜல்லி, கம்பி, சிமிண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தரமான எம்-சாண்ட் கிடைக்க தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத் தொழிலாளர் (சிஐடியு) சங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சுழி ஒன்றி யப் பேரவை சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் வி.சரவணன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன் வாழ்த்துரை வழங்கி னார். மாவட்டப்பொதுச் செயலாளர் பி.ராமர் சிறப்புரை யாற்றினார்.
நிர்வாகிகள் தேர்வு
தலைவர் ஜோதிராஜ், செயலாளர் எம்.சுரேஷ்குமார், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் ஏராள மான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
விவசாயத் தொழிலாளர் சங்க பேரவை
மதுரை, செப். 12- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை உசிலம்பட்டி ஒன்றியப் பேரவை வெ.பாலு தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி. உமாமகேஸ்வரன் துவக்கிவைத்தார். மாவட்டப் பொரு ளாளர் ஜெ.காசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் பி.ராமர், சிஐடியு தாலுகா செயலாளர் எம்.அறிவு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ராம கிருஷ்ணன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன் பேசினார். நிர்வாகிகள் தேர்வு: ஒன்றியத் தலைவர் வெ.பாலு, செய லாளர் வி.எம்.எஸ்.மார்கண்டன், பொருளாளர் சங்கிலி. 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனை வருக்குக் தொடர்ச்சியாக வேலை வழங்கவேண்டும். சட்டக் கூலி ரூ.229 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருவில்லிபுத்தூர், செப். 15- திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வது தொடர்பான கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. ஆணையாளர் கா.சுப்பையா தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.குருசாமி, பசுமை பாரத இயக்கம் சார்பில் செல்வராஜ், எக்ஸ்னோரா சந்தி ரன் மற்றும் லயன்ஸ் கிளப், தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வா ளர்கள் பிரம்ம நாயகம், சரவணன், பழனி குரு , ஜஹாங்கிர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் செய்திருந்தனர்.