tamilnadu

கொலை, மணல் திருட்டுக்காக இருவர் மீது குண்டர் சட்டம்

நாகர்கோவில், மே 20-கன்னியாகுமரி மாவட்டம், கீழ மணக்குடியை சேர்ந்தவர்கிதியோன் (37). இவர், மேலமணக்குடி சேர்ந்த மீனவரானவின்சென்ட் (34) என்பவரை கடந்த மாதம் 23 ஆம் தேதிவெட்டிகொலை செய்தார்.இந்த வழக்கில் தொடர்புடைய கிதியோன் உள்பட நான்கு பேரை சுசீந்திரம் காவல் துறையினர் கைது செய்துசிறையில் அடைத்தனர்.இதேபோன்று, அழகியபாண்டியபுரம்,தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் (40). தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த இவரை பூதப்பாண்டிகாவல் துறையினர், கடந்த 2 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய கிதியோன், தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட மிக்கேல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், மாவட்ட ஆட்சியருக்குபரிந்துரை செய்தார். இதையடுத்து, இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டஆட்சியர் பிரசாந்த் வடநேரே திங்களன்று மாலை உத்தரவிட்டார்.