tamilnadu

img

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கோவளத்தில் மீன் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்...

நாகர்கோவில்:
கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து, மீனவர்களின் உயிர்பலியை, உடல், பொருள் சேதங்களை தடுக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மீன் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி தனிஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜேம்ஸ், கிளை தலைவர் சகாயம், கிளை செயலாளர் மெலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார குழுஉறுப்பினர் ரகுநாதன், சிஐடியுமாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் எஸ்.அ ந்தோணி ஆகியோர் பேசினர். கடல் சீற்றத்தில் வள்ளம் சேதமடைந்து உயிர் பலியான அந்தோணியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர்  மேரி, நிர்வாகி சகாயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக்குழு உறுப்பினர்கள் சுப்பாராம், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.