tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

தரங்கம்பாடி, ஆக.14-  நாகப்பட்டினம் மாவட்டம் மயி லாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை - 2019 வரைவு அறிக்கையை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வா யன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி நிர்வாகி கலைச்செல்வன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் செ. கபிலன், மாவட்ட செயற்குழு பா.விக் னேஷ்சர்மா, பா.ராகேஷ்சர்மா மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

;