tamilnadu

பொறையாரில் அரசு பேருந்துகளை தடையின்றி இயக்க கோரிக்கை

தரங்கம்பாடி மே 16-நாகை மாவட்டம் பொறையாரில் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில பேருந்துகள் முற்றிலும்நிறுத்தப்பட்டன. அதிகாலை 4.30 மணிக்கு பொறையாரிலிருந்து புறப்படும் 440 சி பேருந்து மூலமாக தான் மீனவ பெண்கள், மீன் விற்பனைக்காக கிராமங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில மாதமாக இந்த பேருந்து வராததால் வாடகை வாகனம் எடுத்து மீன்களை எடுத்து செல்லும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் 30 ஏ அரசுப் பேருந்தும்நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். முக்கிய பேரூராட்சி பேருந்து நிலையமாக உள்ள பொறையார் பேருந்து நிலையத்துக்குள் சிதம்பரம், சென்னையிலிருந்து நாகை, வேளாங்கண்ணி பேருந்துகள் வந்து செல்லாததால் ராஜீவ்புர முக்கூட்டில் இறங்கி பேருந்து நிலையம் நடந்து செல்வதற்குள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்று விடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். உடனடியாக பேருந்துகளை தடையின்றி இயக்குவதோடு,அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென என பேராசிரியர் தேவசகாயம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.