tamilnadu

img

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பணிகள் குறித்து இரண்டாம் கட்டமாக சமூக சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கவுரவத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலழகன் முன்னிலை வகித்தார். சமூகத் தணிக்கையாளர் அருளா னந்தம், சமூக தணிக்கையின் அவசியம் குறித்துப் பேசினார். கூட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகள். ஒதுக்கீடு செய்யப் பட்ட தொகை, வேலையில் ஈடுபட்டோர் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்கள் பார்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் களப் பணியாளர்கள் வாசுகி, உமா, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபா நடைபெற்ற கூட்டத்திற்கு கவுரவத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமார் வரவேற்றார். பணி மேற்பார்வையாளர் முத்து முன்னிலை வகித்தார். சமூகத் தணிக்கையாளர் பாலருகன் பேசினார்.