4 மாதப் போராட்டத்திற்கு பிறகு கடலுக்கு செல்லும் பழையாறு மீனவர்கள்
சீர்காழி, நவ.23- சீர்காழி அருகே பழை யாறு மீனவர்கள் 4 மாதங்க ளுக்குப் பிறகு நவ.24 ஆம் தேதி மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்ல வில்லை. அரசால் தடை செய்யப் பட்ட அதிவேக எஞ்சின் பொ றுத்தப்பட்ட 40 விசைப்பட குகள் பழையாறு துறை முகத்தின் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். மீன்பிடித்துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுக மான தீர்வு எட்டப்படாததால் பழையாறு விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். 1983 பிரிவின் படி அரசு அங்கீகாரம் பெற்ற விசைப் படகுகள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்றும், அரசு அங்கீகாரம் பெறாத விசைப்படகுகள் கடலுக்கு செல்லக் கூடாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள் ளதையடுத்து பழையாறு மீனவர்கள் நவ.24 ஆம் தேதி முதல் 4 மாதங்க ளுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இத்தகவலை பழையாறு விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் அருள்செழியன் தெரிவித்தார்.
விவசாயிகள் நிதித் திட்டத்தில் சேரலாம்
தஞ்சாவூர், நவ.23- விவசாயிகள் கவுரவ நிதித் திட்டத்தில் இதுவரை சேராமல் விடுபட்டவர்கள் உடனடியாக சேர்ந்திடுமாறு வேளாண் அதிகாரி விவ சாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள அறி வுறுத்தப்படுகிறார்கள். இத்திட்டத்தில் சேர்ந் துள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 அவர்களது வங்கிக் கணக்கில் ஏற்றப்பட்டு வரு கிறது. ஏற்கெனவே சேர்ந்துள் ளவர்களுக்கு அவர்களது ஆதார் எண்ணிலோ அல்லது வங்கிக் கணக்கிலோ பதிவு மேற்கொண்ட போது தவறு கள் ஏதும் நிகழ்ந்திருப்பின் அவர்களது வங்கி கணக்கில் தொகை ஏறுவதற்கு தங்க ளது ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை தங்கள் பகுதிக்கு அருகாமை யில் உள்ள இ-சேவை மையம் அல்லது வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை யோ உடனடியாக அணுகி சரி யான ஆவணங்களை அளித்து தவறினை திருத்தி பதிவு செய்யலாம். மேலும் இதுவரை இத் திட்டத்தில் சேராமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகள் விடுபட்டிருப்பின் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய வற்றுடன் மேற்கூறப்பட்ட அலுவலகங்களை அணுகி உடனடியாக பதிவு மேற் கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இம்மாத இறுதிக் குள் தங்கள் பெயரை பதிவு செய்யும் விவசாயிகளுக்கு டிசம்பர் மாத தவணை இரண்டாயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் உடன டியாக சேர்க்கப்படும் என பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார்.