tamilnadu

img

அறிவியல் கண்காட்சியில் சர்மிளா காடஸ் பள்ளி சாதனை

தரங்கம்பாடி: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் நாகை மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் கண்காட்சியில் பொறையார் சர்மிளா பள்ளி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளது.  அறிவியல் புத்தாக்க விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பத்தாயிரம் ரூபாய் புத்தாக்கப் பரிசு பெற்றிருந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதில் பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கெசியா பியட்ரிஸ் தன்னுடைய கண்டுபிடிப்பான தானியங்கி குப்பை பிரிக்கும் இயந்திரத்தை காட்சிப்படுத்தினார். அக்கருவி குப்பைகளை கொட்டும் பொழுதே அவற்றை மக்கும் குப்பை, மக்காதக் குப்பை என நுண்ணறியும் கருவிகள் மூலம் தானியங்கியாக பிரித்து விடும் என்று விளக்கினார். மாணவியின் கண்டுபிடிப்புக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியின் அறிவியல் மன்ற நிர்வாகிகள், முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

;