சீர்காழி, மே 6- கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் கே.பி.எஸ்.மணி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஸ்டாலின், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கே.வைத்தியநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், அரசு ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் சி.தனபால், இளைய ராஜா மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.