நாகப்பட்டினம்: தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், நாகை மாவட்ட மையம் சார்பில், மகாத்மா காந்தி 150 பிறந்தநாளை முன்னிட்டு, மத நல்லிணக்கக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினத்தில் நடைபெற்ரது. மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் “ மதங்களும் மனிதநேயமும் “ என்னும் பொருளிலும் நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார் “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு “ என்னும் பொருளிலும் கருத்துரையாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி “மீண்டும் வேண்டும் மகாத்மா “ என்னும் பொருளில் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பொ.ஆசைச்தம்பி நன்றி கூறினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் என்.உலகநாதன், எம்.ராஜமாணிக்கம், எம்.பக்கிரிசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.