சீர்காழி, ஏப்.22- அரியலூர் பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சிதம்பரம்- சீர்காழி நெடுஞ்சாலை புத்தூரில் விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ரஞ்சித் தலைமையில் சீர்காழி தொகுதி செயலாளர் இனியவன், முகாம் அமைப்பாளர்கள் அன்புராஜ், ராஜி, பாக்யராஜ் உள்பட 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.