நாகப்பட்டினம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் புதனன்று நடைபெற்றது.
பேரவைக்கு மாவட்டச் செயலாளர் நாகைமாலி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பேரவையைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார்.ஒன்றுபட்ட நாகை மாவட்டத்தில், கடந்த 2017, வேதாரணியத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் 41 மாவட்டக் குழு உறுப்பினர்கள், 13 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது, மாவட்டப்பிரிவினையால், நாகை மாவட்டத்திற்குப் புதிய மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.வேணு, ப.சுபாஷ்சந்திரபோஸ், கோவை.சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்புதிதாக மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஏ.வெற்றியழகன், ஏ.ராஜா, ஏ.வடிவேல், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.சித்தார்த்தன், ஏ.சிவக்குமார், டி.வெங்கட்ராமன், டி.ஸ்டாலின்பாபு, கே.தங்கமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.