சீர்காழி, ஆக.19- நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பிரபாகரன் (19). இவ ருக்கு சொந்தமான விசை ப்படகு மூலம் கடந்த ஆக. 13 பழையாறு மீன்பிடித் துறை முகத்தின் மூலம் இராமநா தபுரம் மாவட்டம் தெற்கு நரி ப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது சர்க்க ரை மகன் முகமதுபாரித்து (31) மற்றும் ஐந்து பேருடன் மொத்தத்தில் ஏழு பேர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆக.13 அன்று நள்ளிரவு கடலில் மீன்பிடித்துக் கொ ண்டிருந்தபோது பூம்புகா ரில் இருந்து ஒன்பது நாட்டி க்கல் மைல் தூரத்தில் முகமது பாரித்து படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். மறுநாள் ஆக.14 அன்று பழையாறு துறைமுகத்திற்கு மீண்டும் மற்றவர்கள் வந்து சேர்ந்த னர். இந்நிலையில் கடலில் விழுந்து மூழ்கியவரின் உடலை கடலோர காவ ல்படை மற்றும் மீனவர்கள் தொடர்ந்து தேடும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நீரில் மூழ்கிய முகம்மது பாரித்தின் உடல் கிடைக்கவில்லை. பின்னர் பழையார் துறைமுகத்தின் மூலம் மீனவர்கள் கடலு க்குள் மீன்பிடிக்க செல்லா மல் மூழ்கியவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரு ந்தும் உடல் கிடைக்க வில்லை. எனவே மீனவர்கள் தேடும் முயற்சியைக் கை விட்டு மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க மீனவர்கள் செவ்வாயன்று மாலை முதல் புறப்பட்டுச் சென்றனர்.