tamilnadu

img

இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகப்பட்டினம் துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் நேவல் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ளே இந்திய கடற்படை அலுவலகத்தில், பணியாற்றி வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ராஜேஷ், நேற்று காலை பணியிலிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 
அலுவலகத்திலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்ட சக காவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

;