tamilnadu

img

தேசிய தற்காப்பு கலை போட்டி அரசுப் பள்ளி மாணவி சாதனை

தரங்கம்பாடி, பிப்.10- நாகை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி குப்பம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி அஸ்விதா “ஓவீனாம்” எனும் வியட்நாம் நாட்டின் தற்காப்பு கலையின் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்க ளை பெற்று சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் குஜராத் மாநிலம் அனந்து நகரில் 26 மாநிலங்கள் பங்கேற்ற தேசிய விழாவில் தற்காப்பு கலை போட்டியில்  வியட்நாம் நாட்டின் தற்காப்பு கலையான ஓவினாம் போட்டியில்  3 பிரிவிலும் கலந்து கொண்ட மாணவி அஸ்விதா (த/பெ சக்தி வேல்) 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமையாசிரியர் கே.ரவிச்சந்திரன், பயிற்சியாளர் செண்பக வள்ளி, மீனவ பஞ்சாயத்தார்கள் பாராட்டி னர்.