tamilnadu

நாகை ஏ.ஜே.சி. பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

நாகப்பட்டினம், மார்ச் 1- நாகப்பட்டினம், காடம்பாடியில் உள்ள ஏ.ஜே.சி. பப்ளிக்(சீனியர் செகண்டரி) பள்ளியின் ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவிற்குத் திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் முனைவர் பி.ரவீந்திரன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ப.சுபாஷ் சந்திர போஸ், பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.கணேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  மாலையில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்குக் கும்பகோணம் ஏ.ஜே.சி. பள்ளிகள் குழும நிறுவனர் பாஸ்டர் சி.கணேசன் தலைமை வகித்தார். பள்ளி யின் தாளாளர் பி.சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜே. பென்னெட் வரவேற்புரையாற்றினார். நாகப்பட்டினம் துறைமுகப் பொறுப்பா ளர் கேப்டன் ஜே.மானெக்‌ஷா, பாஸ்டர் ஆர்.கே. பிராங்க்ளின், ஜே.எஸ்.ராஜ சேகர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினர். மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளி மேலாளர் செல்வன் ஜெப ராஜ் நன்றி கூறினார்.