tamilnadu

உள்ளாட்சி தேர்தல்: நாகையில்  போட்டியின்றி 156 பேர் தேர்வு  

நாகப்பட்டினம்,டிச.21- நாகை மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டுகளின் மொத்த எண்ணிக்கை-3426. இவற்றுள், 153 வார்டுகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்கள்.  மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய வார்டுக ளின் மொத்த எண்ணிக் கை-214. இவற்றுள் ஒன்றும், மாவட்டம் முழுவதும் உள்ள  மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள்-434., இவற்றுள் 2 பேர் எனக் கூடுதல் 156 பேர் போட்டி யின்றி வெற்றி பெற்றுள்ள னர்.  விவரம் வருமாறு- நாகை ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்-17, கீழ்வேளூர் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்- 8, கீழை யூர் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்-11, தலைஞாயிறு ஒன்றியத்தில் ஊராட்சி- 13, வேதாரணியம் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்- 25, திருமருகல் ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்- 11, மயிலாடுதுறை ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்- 14, சீர்காழி ஒன்றியத்தில் ஊராட்சி வார்டுகள்- 12, குத்தாலம் ஒன்றியத்தில் ஊராட்சிகள்- 7, கொள்ளிடம் ஒன்றியத்தில் ஊராட்சிகள்- 35. கூடுதல்- 153 ஊராட்சி வார்டுகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். ஊராட்சி ஒன்றிய உறுப்பி னர் பதவிக்கு, வேதாரணி யம் ஒன்றியத்தில் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற் றுள்ளார்.  ஊராட்சி மன்றத் தலை வர் பதவிக்கு வேதாரணியம் ஒன்றியத்தில் ஒருவரும் குத்தாலம் ஒன்றியத்தில் ஒருவரும் கூடுதல் 2 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.  ஆக, மாவட்டம் முழு வதும் 156 பேர் போட்டி யின்றி தேர்வு பெற்றுள்ள னர்.