tamilnadu

இலக்கிய மன்றத் தொடக்க விழா

 மயிலாடுதுறை, ஆக.22- நாகை மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத் துறையின் சார்பில் இலக்கிய மன்ற தொடக்க விழா வியாழக்கிழமை நடந்தது. தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு வரவேற்றார் கணிப்பொறியியல் துறைத் தலைவர் முனைவர் கு.தியாகராஜன் தலைமை வகித்து பேசினார்.  கல்லூரிச் செயலர் கி.கார்த்திகேயன், ஏ.வி.சி.பொறி யியல் கல்லூரியின் இயக்குநர் செந்தில் முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் முனைவர் சி.சிவசங்கரன் பேசினார். வணிகவியல் முதலாமாண்டு மாணவி க.மாதங்கி தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் முதுகலைத்தமிழ் மாணவி ரா. கௌசிகா சங்க இலக்கியத்தில் அறம் என்னும் தலைப்பில் உரையாற்றினர். இலக்கிய மன்றச் செயலாளர் மாணவர் நா.ஐயனார் நன்றி கூறினார். இளங்கலைத் தமிழ் மாணவி தமிழ் தைலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.