tamilnadu

img

மயிலாடுதுறை வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

தரங்கம்பாடி, ஏப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாகை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் நாகை மாலி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், திமுக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் க.அன்பழகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு, மாவட்ட, வட்டக்குழு உறுப்பினர்கள், திமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக காட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குத்தாலம் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர் நன்றி கூறினார்.

;