tamilnadu

img

பாசன வாய்க்கால்களை வெளிப்படை தன்மையுடன் தூர்வாரக் கோரிக்கை

தரங்கம்பாடி, ஜூன் 2- தூர்வாரும் பணிகளை வெளிப்படை தன்மையோடு நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஆசைத்தம்பியிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ் கோரிக்கை மனு அளித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.கணேசன், வட்ட செயலா ளர் சி.மேகநாதன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராயர், ஒன்றிய தலைவர் பி.மாரி யப்பன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் வைரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாசன ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் இடங்களில் மதிப்பீடு, ஒப்பந்ததாரரின் முகவரி அடங்கிய பலகையை அமைக்க வேண்டும். பணிகளை கண்காணிக்க விவ சாயிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். 

;