தரங்கம்பாடி, ஜூன் 13- நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தரைக்கடை வியா பாரிகளை மிரட்டி கடைகளை அகற்றிய நகராட்சி நிர்வா கத்திற்கு சிறு விற்பனையாளர் சங்கம்(சிஐடியு) கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இது குறித்து இச்சங்க மாவட்ட செய லாளர் துரைக்கண்ணு கூறும்போது, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய சாலையான வண்டிக்கார தெருவில் கடந்த பல ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டோர் தின்பண்டங்கள், பழங்கள், காய்கறிகளை தரையில் அமர்ந்தும், தள்ளுவண்டி கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய கோட்டாட்சியர் அஜய் யாதவ் தரைக்கடை வியாபாரிகள் அமர்ந்து வியா பாரம் செய்ய இருபுறமும் அளவீடு செய்து கயிறு கட்டி அனு மதித்திருந்தார். இந்நிலையில் வியாழனன்று நகராட்சி ஆர்.ஐ. பாஸ்கர் தலைமையில் ஊழியர்கள் தரைக்கடை வியாபாரி களிடம் 100, 50, 30 என பணம் கேட்டுள்ளனர். எந்தவித முன்னறி விப்புமின்றி நாங்கள் தர முடியாது. வெண்டிங் கமிட்டியை கூட்டி அறிவித்தால் மட்டுமே தர முடியும் என வியாபாரிகள் கூறியதை ஏற்காமல் காவல்துறை துணையுடன் அராஜக போக்குடன் அனைத்து தரைக்கடைகளையும் அகற்றியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. மேலும் கடைகள் இருந்த இடத்தில் பள்ளத்தையும் நக ராட்சி நிர்வாகம் அடாவடித்தனத்துடன் செயல்பட்டுள்ளது. உட னடியாக இருபுறமும் கயறு அமைத்து கடைகளை அமைக்க அனுமதிப்பதோடு, பள்ளங்களை சீரமைக்க வேண்டும், வெண்டிங் கமிட்டி கூட்டத்தினை முறையாக கூட்டி வரி வசூல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென துரைக்கண்ணு கூறி யுள்ளார். இதனிடையே கடைகள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்க ளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், வட்ட செயலாளர் மேகநாதன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ரவீந்திரன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க ராஜேஷ், சங்கத்தின் தலைவர் மாரியப்பன், இணை செயலாளர் சம்சுதீன்,வெண்டிங் கமிட்டி உறுப்பினர்கள் வெங்கடாச்சலம், ஜோதி ஆகியோர் பார்வையிட்டனர். தரைக்கடை வியாபாரிகளை நசுக்கும் விதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தனர்.