நாகப்பட்டினம், மார்ச் 3- நாகப்பட்டினத்தில், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க நாகைக் கிளைப் பேரவை செவ்வாயன்று நடைபெற்றது. பேரவைக்கு நாகைப் பணிமனைக் கிளைத் தலைவர் ஆர்.பரணிகுமார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி துவக்கவுரையாற்றினார். கிளைச் செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம் வேலை அறிக்கையை முன் வைத்தார். நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பின் தலைவர் சு.சிவகுமார், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளன உறுப்பி னர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், தோழமைச் சங்க நிர்வாகிகள் எஸ்.கணபதி, கே.ஐயப்பன் வாழ்த்துரை வழங்கினர். மத்தியச் சங்கத் துணைத் தலை வர் எம்.கண்ணன், ‘தொழிலாளர்க ளின் போராட்ட வலிமை’ பற்றியும், மத்தியத் துணைச் செயலாளர் எஸ்.நடராஜன், ‘தொழிலாளர்களின் ஒற்றுமை’ பற்றியும் சிறப்புரை யாற்றினர். மத்தியச் சங்கத் தலைவர் ஜி.செந்தில் நிறைவுரையாற்றினார். கிளைத் துணைத் தலைவர் நன்றி கூறினார். சங்க நாகைக் கிளைத் தலைவராக ஆர்.சண்முகசுந்தரம், செயலாளராக கே.மனோகரன், பொருளாளராக ஜி.வேலாயுதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.