tamilnadu

img

மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய ஆசிரியைகள்

சீர்காழி, மே 10-  நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே கீராநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியராக மேகலா, பட்டதாரி ஆசிரியையாக பத்மாவதி, இடைநிலை ஆசிரியர்களாக சுமதி, பிரியா ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.  இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் 48 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ ஆயிரம் வாழ்வாதார உதவி தொகையாக வழங்குவது என முடிவு செய்தனர். அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளின் குடும்பத்திற்கு, அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று தலைமையாசிரியை மேகலா, இடைநிலை ஆசிரியை சுமதி ஆகி யோர் தலா ஆயிரம் ரூபாய் வழங்கினர். மேலும், அப்பள்ளியில் பணியாற்றும் துப்பரவு பணியாளர் அமுதா, தோட்ட பரா மரிப்பு பணியாளர் பச்சையம்மாள் ஆகி யோருக்கும் தலா ரூ ஆயிரம் வழங்கினர்.