சீர்காழி, மார்ச் 1- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநாடு சனிக் கிழமையன்று மாலை நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது. அக்கட்சி யின் நிலையச் செயலாளர் மாயவரம் ஜே அமீன் தலைமை வகித்தார். தமு முக மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்எல்ஏ முன்னாள் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன எழுச்சி உரை யாற்றினர். சிபிஎம் நாகை மாவட்டச் செயலா ளர் நாகை மாலி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், டி.ஒய்.எப்.ஐ. நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், சிபிஎம் வட்டச் செயலாளர் சி.வி. ஆர்.ஜீவானந்தம், திமுக நாகை மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பி னர் செ.ராமலிங்கம், தமிழக வாழ்வு ரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், விசிக நாகை மாவட்டச் செய லாளர் பா.ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றியத் தலைவர் கமலஜோதி தேவேந் திரன், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், இந்திய மக்களின் சகோ தரத்துவத்தையும், இறையாண்மை யையும் சீர்குலைக்கும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். (ந.நி.)