ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மண்ணின் பூர்வீக குடிமக்களை நகரத்தை விட்டு வெளியேற்றிய அரசின் முடிவை கண்டித்தும், தலித் மக்களை மாநகரிலேயே குடியமர்த்தக் கோரியும் சமூகநீதிக் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகரத் தலை வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில் தலைவர் பன்னீர் செல்வம், பொதுச் செயலாளர் வெள்ளமடை நாகராசு, கொள்கை பரப்புச் செயலர் தண்டபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.