மயிலாடுதுறை, நவ.1- மயிலாடுதுறை அருகே ஏவிசி பொறியியல் கல்லூரி மாணவர் கள் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் மண்டலத்திற்குட்பட்ட பொறி யியல் கல்லூரி இடையேயான ஆடவர் பிரிவிற்கான கிரிக்கெட் போட்டி திருவாரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் அண்மையில் நான்கு நாட்கள் நடைபெற்றன. போட்டியில் 15 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை, ஏ.வி.சி கல்வி நிறுவனங்க ளின் தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கி.கார்த்திகேயன் பொருளாளர் என்.ஞானசுந்தர், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், இயக்குனர்(நிர்வாகம்) முனைவர் எம்.செந்தில்முருகன், முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ், துணை முதல்வர் முனைவர் எஸ்.செல்வமுத்துகுமரன், டீன்(கல்வி) முனைவர் ஜி.பிரதீப், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குனர் முனைவர் எஸ்.விஜயராஜ் மற்றும் பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஏ.வி.முத்துக்குமரன் ஆகியோர் பாராட்டினர்.