tamilnadu

img

வேளாண் கூட்டுறவு வங்கி முறைகேடுகளைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், நவ.1- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்குக் கொண்டுவரப்படும் விவசாய உரங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படாமல், கூட்டுறவு வங்கியின் செயலாளர், தனக்கு வேண்டியவர்களுக்கும் தனியார் உர வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து ஊழல் செய்வதைக் கண்டித்தும், செயலாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், புதன்கிழமை அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரணியம் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சி.பி.எம். வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கம், ஏ.வெற்றியழகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் இடையே,  மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் சோமசுந்தரம்,  காவல்துறை ஆய்வாளர், மற்றும் சி.பி.எம். தலைவர்கள்  இடையேயான பேச்சுவார்தை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இனி, இப்படிப்பட்ட தவறுகள் நடைபெறாத வண்ணம் கண்காணிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.