மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரங்கம்பாடி வட்டத்தில் கட்சி நிதி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருதம்பள்ளம், காலமநல்லூர், சின்னங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வி, வட்டக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, வாலிபர் சங்க வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன், கிளை செயலாளர் பரமசிவம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் இளையராஜா, சீனிவாசன், சந்திரகாசு ஆகியோர் கடந்த 6 நாட்களாக மக்களிடம் கட்சி நிதி திரட்டி வருகின்றனர்.