நாகப்பட்டினம், செப்.30- தேசத்தில் வேலை இல்லாத் திண் டாட்டம் மிக மோசமாகி வருவதைப் பொது மக்களுக்கு உணர்த்தவும், இளைஞர்களுக்கு வேலை கேட்டும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் செப்.26 முதல் 29 வரை மாநிலம் தழுவிய தெருக்குள்ளே பிரச்சாரம் என்னும் இயக்கம் நடைபெற்றது. சனிக்கிழமை அன்று, தலை ஞாயிறு ஒன்றியம், கொளப்பாடு கடைத் தெருவில், வாலிபர் சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் ஏ.ராஜா தலைமையில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. வாலிபர் அங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார் சிறப்புரையாற்றித் துவக்கி வைத்தார். சி.பி.எம்.தலை ஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு வாழ்த்துரை வழங்கினார். வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.அருள் தாஸ் பிரச்சாரப் பயணத்தை வழி நடத்தினார். தோழமைச் சங்க நிர்வாகி கள் டி.செல்லையன், வி.ராஜகுரு, டி. தனபால், கே.அலெக்சாண்டர்,டி.செல்வி, ஏ.டி.முருகையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து, அன்று மாலையில், தலைஞாயிறு கடைத்தெருவில் வாலி பர் சங்க மாவட்டப் பொருளாளர் டி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றிப் பிரச்சாரப் பயணத்தை முடித்து வைத் தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.குமார், ஜே.மேனகா, பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், எம்.சீனிவாச ராவ், சுரேஷ், தங்கத்துரை, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்று, வாலி பர் சங்கத்தின் பிரச்சாரப் பயணம், கீழை யூர்க் கடைத்தெருவில் ஒன்றியச் செய லாளர் பி.விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. சிவக்குமார் துவக்கி வைத்துச் சிறப்பு ரையாற்றினார். சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகை யன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். அப்துல் அஜீஸ், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் கே. சித்தார்த்தன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.பன்னீர்செல்வம், வி.ச.ஒன்றியச் செய லாளர் கே.கிருஷ்ணன், ஜே.ஐயப்பன், வி.தொ.ச. ஒன்றியத் தலைவர் ஏ.முரு கையன், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் கே.டி.எம்.சுஜாதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி.தமிழ்மாறன், கே.புகழேந்தி, கண் மணி, யு.ஜோதிபாசு, எஸ்.அன்புராஜ், டி.ஏ.டி.ரவிச்சந்திரன், எஸ்.ரஜா, எஸ்.ரமேஷ், வி.நெல்சன் மண்டேலா, கே. கோபிநாத் உள்ளிட்ட பலர் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்றனர். திருப் பூண்டிக் கடைத் தெருவில், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் டி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றிப் பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்து வைத்தார்.