தரங்கம்பாடி நவ4- மத்திய அரசின் தடையில்லா வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு விவசாயிகள் சங்க(சிபிஐ) மாநில துணைத் தலைவர் ஜி.கலிய மூர்த்தி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ப.மதியழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்றும் மத்திய அரசின் நடவ டிக்கை கண்டிக்கத்தக்கதும் என ஆர்ப் பாட்டத்தில் முழக்கமிட்டனர். விவசாயி கள் சங்க நிர்வாகிகள் எ.பிச்சையன், ஜி.புண்ணியமூர்த்தி, எம்.செல்வராஜ், ஜி.கே.குமார் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.