tamilnadu

img

கல்லூரியில் இரத்ததான முகாம்                              

 தரங்கம்பாடி: நாகை மாவட்டம்,பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் இரத்ததான முகாம் பொறையார் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நடை பெற்றது. தேசிய மாணவர் படை கடற்படை மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் முகாமை துவக்கி வைத்தார்.பொறையார் லயன்ஸ் சங்க தலைவர் விஜயக்குமார், சங்கத்தை சேர்ந்த அன்பழகன்,வெங்கடேசன்,கல்லூரியின் துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார்,ஜோயல் எட்வின்ராஜ்,என்.சி.சி அதிகாரிகள் கோபி நாதன், தாமஸ் நித்தியானந்தம்,முன்னாள் அலுவலர் ராஜா சாலோமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இரத்ததானத்தை ஊக்குவித்து,விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர்க ளில் சிலரும் இரத்ததானம் செய்தனர்.