tamilnadu

30 சதவிகித குடும்ப ஓய்வூதியம் கோரி வங்கி ஓய்வூதியர்கள் தர்ணா

நாகர்கோவில், டிச.9- வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், திருத்தப் பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், விலைவாசிக்கேற்ப 100 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஓய்வூதியர் கூட்டமைப்பு மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியர் சங்கம் சார்பில் திங்களன்று வடசேரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு, மாநில செயலாளர் தாமஸ் பிராங்க தலைமை வகித்தார். கண்ணன், நம்பி, விஷ்ணு, குமார சாமி, குமார், செந்தில், எம்.அகமது உசேன், டொமினிக் ஜெயபால், ரெகு ஆகியோர் பேசினர். இதில் வங்கி ஓய்வூ தியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.