tamilnadu

img

ஏவிசி கல்லூரி தமிழாய்வுத்துறையில் ‘தமிழ் வாரம்’ இலக்கிய பட்டிமன்றம்

மயிலாடுதுறை, பிப்.26- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத் துறையில் ‘தமிழ் வாரம்’ என்னும் பெயரில் ஒரு வார கால தொடர் கருத்தரங்கம் நடைபெற்றது. நிறைவு நாளான புதனன்று தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  இலக்கிய மன்றத் துணைத்தலைவர் சு.தமிழ்வேலு முன்னிலை வகித்து உரையாற்ற, ஏ,வி.சி. கல்லூரியின் செயலர் கி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சிமன்றத் தலைவர் மருத்துவர் ந.விஜயரெங்கன் மற்றும் தமிழ் இலக்கிய மன்றத் தலைவரும் ஏ.வி.சி.கல்லூரி முதல்வருமான இரா.நாகராஜன் கலந்து கொண்டனர்.  தனி மனித முன்னேற்றத்திற்குப் பெரிதும் துணையாய் இருப்பது நட்பே! உறவே!’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்விற்கு தமிழாய்வுத்துறை மேனாள் தலைவர் பேராசிரியர் சா.கிருட்டிணமூர்த்தி நடுவராக செயல்பட்டார். இதில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் ந.சரவணன் வரவேற்புரையாற்ற தமிழ் இலக்கிய மன்றச்செயலர் செல்வன் நா.அய்யனார் நன்றிகூறினார்.
கணினி அறிவியல் கருத்தரங்கம்
கணினியியல் துறை, பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. 
இதற்கு கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார்.