மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஐ.க்யூ.ஏசி மற்றும் ஐ.சி.சி சார்பாக பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் ஆசிரியர்களுக்கான ஒருமுனைப்படுத்தல் நிகழ்ச்சி மற்றும் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் எஸ்.மாலதி பேசினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக்கல்லூரி பேராசிரியர் எஸ். வைரமணி, இரண்டாம் அமர்வில் பீஸ் பவுண்டேசன் இயக்குனர் டாக்டர் ஆர்.செல்வம், மூன்றாம் அமர்வில் மருத்துவர் வசந்தாஜெயராமன் பேசினர். நிறைவில் செயலர் கார்த்திகேயன், மாணவிகள் ஆர்.கலைவாணி, பி.பத்மாவதி, டி.கே.ஏழிசைப்பா வை, என்.ஆனந்தரத்னா, ஏ.சத்தியவதி ஆகியோர் பல்துறைகளில் செய்த சாதனைகளை நினைவுபடுத்தி அவர்களை இவ்வாண்டின் சாதனை பெண்களாக கௌரவப்படுத்தினார். கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கோமதி ரெத்தினகுமார், ஐ.க்யூ.ஏசி ஒருகிணைப்பாளர் பி.அன்புசீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐ.சி.சி ஒருங்கி ணைப்பாளர் எஸ்.சத்தியபாமா வரவேற்றார். பேராசிரியர் டாக்டர் ஏ.சங்கரி நன்றி கூறினார்.