tamilnadu

img

அதிகாரிகள் அலட்சியத்தால் தொடர் விபத்து  கொள்ளிடம் வாய்க்கால் பாலம் திடீரென உடைந்து நடந்து சென்ற பெண் படுகாயம்

 சீர்காழி, செப்.3- கொள்ளிடம் அருகே நடைபாலம் திடீரென உடைந்து பெண் படுகாயமடைந்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக் காட்டுபடுகை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மனைவி நீலாவதி(45) இவர் சம்பவத்தன்று தெற்குராஜன் வாய்க்காலின் குறுக்கே உள்ள 40 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த நடைபாலத்தில் நடந்து சென்றார். அப்போது நடைபாலத்தின் நடுவில் வந்த போது பாலத்தின் நடுவில் உள்ள சிமெண்ட் சிலாப் உடைந்து நீலாவதி வய்க்காலில் கீழே விழுந்தார். இதில் படுகாய மடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் மீட்கப்பட்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இது குறித்து கொன்னக்காட்டுப்படுகை கிராம மக்கள் கூறுகையில், தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே உள்ள இரும்பு நடைபாலம் கட்டப்பட்டு 40 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. இந்த பாலம் உடைந்து விழும் நிலையில் உள் ளது. பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பாலத்திலி ருந்து இக்கிராமத்தைச் சார்ந்த பல ஆடுகள் வாய்கா லுக்குள் விழுந்து இறந்திருக்கின்றன. பலர் இப்பாலத்தின் வழியே நடந்து வரும் பொழுது தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து காயமடைந்திருக்கின்றனர். இப்பகுதியில் உள்ள 2 குழந்தைகள் கடந்த வருடம் கீழே விழுந்து காயம டைந்து சிகிச்சை பெற்றனர். வாய்க்காலில் மழைக் காலத்தில் தண்ணீர் வரும் போது பாலத்திலிருந்து குழந்தைகள் தடுமாறி வாய்கா லுக்குள் விழுந்ததால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபா யம் உள்ளதால் இந்த நடைபாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.