tamilnadu

img

நூறு ஆண்டு கடந்தும் பொலிவு மாறாத பாலம்

சீர்காழி, செப்.12- கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுப் படுகை கிரா மத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாசன வடி கால் கான்கிரீட் வாய்க்கால் வலிமை மாறாமல் அப்படியே உள்ளது.  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக் காட்டுப் படுகை கிராமத்தில் தெற்குராஜன் பாசன வாய்க்கா லிலிருந்து கிளை வாய்க்கால் பிரிந்து சரஸ்வதிவிளாகம், கடுக்காமரம், சாமியம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்று அழிஞிசியாறு என்ற வடிகாலில் கலக்கும் வாய்க்கால் புது கன்னிவாய்க்காலாகும்.  இந்த வாய்க்கால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலின் குறுக்கே பெரிய வடிகால் வாய்க்கால் செல்வதால் இந்த புது கன்னிவாய்க்கால் சிமெண்ட் கான்கி ரீட்டால் கட்டப்பட்ட வாய்க்கால் வழியாகச் செல்கிறது. இந்த கான்கிரீட் வாய்க்கால்  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் வலிமை மாறாமல் இருந்து வருகிறது. எத்தனையோ பாலங்கள் கட்டப்பட்டு 10 அல்லது 20 வருடங்களில் உடைந்து விடுகிறது. அனால் 100 ஆண்டு களை கடந்த பாலம் இன்றும் நிலை குலையாமல் பொலி வுடன் இருந்து வருகிறது. ஆனால் இந்த புதுகன்னி வாய்க்கால், பல வருடங்களாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் சென்று வாய்க்காலின் கடைசி வரை சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே இந்த புதுகன்னி வாய்க்காலை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தவும், கான்கிரீட் வாய்க்காலை பாது காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொன்னக்காட்டுபடுகை விவசாய சங்கத் தலைவர் சுந்தர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.