tamilnadu

செம்பனார்கோவிலில் 95 சதவீத பருத்தி கொள்முதல்

தரங்கம்பாடி, ஜூலை 14- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  நாகை கூட விற்பனை செயலாளர் கோ.வித்யா தலை மையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விற்பனை கூட மேற்பா ர்வையாளர் பாபு முன்னிலையில் ஏலம் நடைபெற்று அதிக பட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.55.50-க்கு விலை போனது.  500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4 ஆயிரத்து 500 க்கும்  மேற்பட்ட பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து பயனடைந்த னர். 95 சதவீத பருத்திகள் இந்திய பருத்தி கழகத்தால் கொள்மு தல் செய்யப்படதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.