tamilnadu

ஒதுக்கீடு செய்தும் மனைப் பட்டா வழங்கப்படாததால் 10 வருடங்களாக 20 குடும்பங்கள் அவதி

 சீர்காழி : சீர்காழி அருகே சீயாளம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச மனைப் பட்டாக்களை பிரித்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே சீயாளம் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்க ளுக்கு 10 வருடங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 20 குடும்பங்களுக்கும் இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு மனைப்பட்டா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகள் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.  அரசால் வழங்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு ஏக்கர் நிலத்தை குறிப்பிட்ட பயனாளிகளுக்கு பிரித்து வழங்க வில்லை.  நிலமற்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசின் இலவச மனைப்பட்டா ஒதுக்கீடு செய்தும் இதுவரை பிரித்து கொடுக்காததால் உறவினர்களின் வீடுகளிலேயே மேற்கண்ட 20 தொழிலாளர்களின் குடும்பங்களும் நெருக்கடியில் வசித்து வருகின்றன. இது குறித்து கிராம மக்கள் சார்பில் பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து விவசாயிகள் சங்க தாலுகா துணை  செயலாளர் பாக்யராஜ் கூறுகையில், ஆதிதிராவிடர்க ளுக்கான ஒதுக்கீடு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உரிய பயனா ளிகளிடம் 10 வருடங்களுக்கு மேலாகியும் ஒப்படைக்க வில்லை. உடனடியாக நிலங்களை உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை என்றால் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தை விரைவில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தார்.