சீர்காழி, ஜூன் 14- நாகை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி கடுக்காமரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அம்சம் (60), ராம்மூர்த்தி (59). இவர் களுக்கு சொந்தமான தொகுப்பு வீடு கள் சமீபத்தில் பெய்த மழையால் மேற் கூரை முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழுந்தது. இதனால் வீடு முழுவதும் தரை மட்டமானது. பகற்பொழுதில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏதுமில்லாமல் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருட் கள் அனைத்தும் சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், உணவுப்பொருள், ரூ1000 நிதி உதவி அளித்தும், வீடுகளை இழந்த இருவ ருக்கும் அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார். முன்னாள் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர் செல்வம், தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜய பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.