tamilnadu

img

வனச்சரக அலுவலகம் முற்றுகை

கடமலைக்குண்டு, ஜூலை 2- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இந்திராநகர், அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட ஏரா ளமான மலைக்கிராமங்கள் உள் ளன. பீன்ஸ், எலுமிச்சை, தக்காளி உள்ளிட்ட விவசாயங்கள் நடை பெற்று வருகிறது. விவசாயிகள் விளை பொருட்களை லாரி உள் ளிட்ட வாகனங்களில் ஏற்றி தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தை களில் விற்பனை செய்து வருகின்றனர்.  பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் மலைக்கிராத்தில் வசிக்கும் மக்களுக்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதி த்து வனப்பகுதியை பாதுகாத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்க ளாக இந்திராநகர் மலைக்கிராமம் வரை மட்டுமே லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்க வேண் டும் என வனத்துறை உத்தரவிட் டது. இதனால் இந்திராநகர் கிரா மத்தை கடந்து அமைந்துள்ள விவ சாய நிலங்களில் இருந்து விளை பொருட்களை சந்தைகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை.  

இதுதொடர்பாக விவசாயி கள் வனத்துறையினரிடம் கோரி க்கை விடுத்தும் வாகனங்கள் செல்வதற்கான தடை நீக்கப்பட வில்லை. இதையடுத்து வியாழ னன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சங்கத் தலைவர் கண்ணன், கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் போஸ் ஆகியோர் தலைமையில் இந்திராநகர் கிரா மத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடமலைகுண்டு வில் உள்ள மேகமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். அவர்களுடன் வனச்சரகர் சதீஸ்கண்ணன் பேச்சுவார்தை நடத்தினார்.  பேச்சுவார்த்தையியில் “தேனி மாவட்ட ஆட்சியர் வாரத் தில் மூன்று நாட்கள் வனப்பகுதி யில் உள்ள விவசாய நிலங்க ளுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்க ளில் சென்று விளை பொருட்களை ஏற்றிச் செல்லலாம் என உத்த ரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி வனத்துறையினர் தற்போது வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் விவ சாயிகளின் வாழ்வாதாரம் கடு மையாக பாதிப்படையும் நிலை உள்ளதால் தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தினர்.

ஆனால் மாவட்ட வனத்துறை யினர் அனுமதியில்லாமல் இது தொடர்பாக எந்த நடவடிக்கை யும் எடுக்க முடியாது என வனச்சர கர் தெரிவித்ததால் போராட்டம் நீடித்தது. அதன்பின் மயிலாடும் பாறை வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலு வலர் அன்பழகன், மேகமலை ஊராட்சித் தலைவர் பால் கண்ணன், கடமலைக்குண்டு காவல்துறையினர் மேகமலை வனச்சரகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, மலைக் கிரா மங்களில் தற்போது பயன்படுத் தப்பட்டு வரும் பாதைகளை மட் டும் பயன்படுத்த வேண்டும், விவ சாய நிலங்களுக்கு செல்ல புதிய பாதைகளை உருவாக்கப் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை வனச்சரகர் பிறப்பித்தார். இந்திராநகர் கிரா மத்தை வாகனங்கள் கட்ந்து செல்லவும் வனச்சரகர் உத்தரவிட் டார். போராட்டம் விலக்கிக்கொள் ளப்பட்டது.