தேனி, மே18- போடி அருகே அரசு பொறியி யல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தனி மைப்படுத்தப்பட்ட முகாமில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த ஆண்டி பட்டி அருகேஉள்ள டி.சுப்புலாபுரத் தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சசிகுமார் (20) தூக்கிட்டு தற்கொ லை செய்துகொண்டார். மேலும் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்குஉணவு, தண்ணீர், மருத்துவ வசதியில்லை. எனவே தங்களை வீட்டிற்கு அனுப்ப வலியுறுத்தி தனிமை முகாமில் ஞாயிறன்று மாலை சுமார் ஐந்து மணிநேரம் போராட்டம் நடத்தினர்.வருவாய்கோட்டாட்சியர், காவல்துறை துணைக்கண் காணிப்பாளர் ஆகியோர் அவர்களை சமா தானப்படுத்தினர்.
தனிமை முகாமில் பணியிலிருந்த மருத்துவர் ஞாயிறு பிற்பகல் முதல் எங்கு சென்றார்எனத் தெரிய வில்லை. மருத்துவர் சம்பவஇடத்தில் இல்லாததே சசிக்கு மார் இறப் பிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாமில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வராததும், பெற்றோருக்கு ஆறுதல் கூறாததும் சமூக ஆர்வலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .முகாமில் தங்கியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் பால், பிஸ்கட் கிடைக்கவில்லை என்றுகதறினார். கேரளாவி லிருந்துகால்நடையாகவந்த நான்கு நபர்கள் காட்டுத்தீயில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போதும் தேனி ஆட்சியர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.