tamilnadu

இறப்பை மறைத்த  தேனி  மாவட்ட நிர்வாகம்  சமூக பரவலாகும் கொரோனா  

தேனி, ஜூலை 2- தேனியில் வியாழன் நிலவரப்படி 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 783 ஆக உயர்ந்துள்ளது .குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 587 பேர்  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பும் அறிக்கையில் கடந்த இரண்டு தினங்களில் இறந்த இரண்டு பேர் விபரம் மறைக் கப்பட்டுள்ளது. கொரோனா  பரிசோதனை மேற்கொண்ட நபர்களுக்கு முடிவுகளைத் தெரிவிப்பதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரண மாக இடைப்பட்ட காலத்தில் தொற்று பரவி சமூகப் பர வலாக மாறி வருகிறது.

;