tamilnadu

img

அரசு உத்தரவை மீறி தேர்வு நடத்தும் கல்லூரி

தேனி, ஜூன் 15- தேனியில் அரசு உத்தரவை மீறி தேர்வு நடத்தும் தேனி கம்மவார் சங்க கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் வசூலித்து வருவதை கண்டித்தும், வருகிற 22 ஆம் தேதி முதல் தேர்வு நடத்த அறிவிப்பு கொடுத்த தேனி கம்மவார் சங்க கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி யுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலை வர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.நாகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கரண்குமார், வேல் பிரகாஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.