தேனி,ஜூன் 8- பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாகக் கூறி, மல்லிகைப் பூவை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (51). என்பவரிடம் பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ.9.84 லட்சத்திற்குப் பதிலாக மல்லிகைப் பூவை கொடுத்து ஏமாற்றிய தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் (50) மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் (21) அப்பா, மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும், இந்த பண மோசடி சம்பவத்தில் தொடர்புடைய, முருகேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.