கடமலைக்குண்டு, மே 6- கடமலை-மயிலை ஒன்றியத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது வரை கடமலை-மயிலை ஒன்றியத்தில் பொதுமக்கள் யாருக்கும் கொரோனா நோய் தாக்கம் கண்டறியப்பட வில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. இதனை யடுத்து கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏரா ள மானோர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள தங்களது சொந்த கிராமங்களுக்கு வர தொடங்கி யுள்ளனர். அவ்வாறு வரும் பொதுமக்களை தேனி மா வட்ட எல்லைகளில் சுகாதாரதுறையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் போலீஸ் சோதனைக்கு பயந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் மலைச்சா லை வழியாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளுக்குள் நுழைந்து வருகின்றனர். மல்லப்புரம் மலைச்சாலை தொடங்கும் இடமான தாழையூத்து கிராமத்தில் போலீஸ் சோதனை சாவடி அமை ந்துள்ளது. ஆனால் இந்த சோதனை சாவடி யில் 4 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும் சுகாதாரதுறையினர் யாரும் பணியில் இல்லை. எனவே மலைச்சா லை வழியாக வரும் பொ துமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு கள் உள்ளதா என கண்டறிய முடியவில்லை. இதே போல கடமலை-மயிலை ஒன்றியத்தில் இருந்து ஏராளமானோர் பொய்யா ன காரணங்களை கூறி மதுரை, விருநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் கடமலை-மயிலை ஒன்றித்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழையூத்து சோதனை சாவடியில் சுகாதார துறையினரை பணியில் அமர்த்தி மலைச்சாலை வழியாக வரும் அனைத்து பொதுமக்களுக்கும் கா ய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு கள் உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.