tamilnadu

img

கொரோனாவால் இறந்தவர் உடலை பெற்ற மகன் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற கொடுமை

தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் 14-வது வார்டுஅழகுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த சின்னம்மாள்   வயிற்றுப்போக்கு காரணமாககூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைஅளித்த மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சின் னம்மாள் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இறந்த தகவலை கூடலூர் நகராட்சிக்கு முறைப்படி சின்னம்மாள் வீட்டார் தெரிவித்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிப்பதாக இறந்த பெண்ணின் மகனிடம்தெரிவித்தனர். சுமார் 12 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து தெரு மக்கள் உடலை உடனடியாகஎடுத்து அடக்கம் செய்யுமாறு குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தனர். நகராட்சிசுகாதரப்பிரிவு அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் அமரர் ஊர்தி வராத நிலையில்  தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துதாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றார். பின்னர் தகன எரிவாயு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை உரிய பாதுகாப்பு இல்லாமல் முக்கிய வீதிகளில் தள்ளுவண்டியில் எடுத்து சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

;